Wednesday 8th of May 2024 07:19:50 AM GMT

LANGUAGE - TAMIL
.
தமிழ்நாட்டில் 4 ஆயிரத்தை நெருங்கியது புதிய தொற்று: 82 ஆயிரத்தை கடந்தது மொத்த தொற்று!

தமிழ்நாட்டில் 4 ஆயிரத்தை நெருங்கியது புதிய தொற்று: 82 ஆயிரத்தை கடந்தது மொத்த தொற்று!


தமிழ்நாட்டில் 4 ஆயிரத்தை நெருங்கிய புதிய தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை 82 ஆயிரத்தை கடந்துள்ளது.

தமிழ்நாடு சுகாதார அமைச்சு சற்றுமுன்னதாக வெளியிட்ட நாளாந்த அறிக்கையின் அடிப்படையில் இன்று புதிதாக 3 ஆயிரத்துமு 940 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களது எண்ணிக்கை 82 ஆயிரத்து 275 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் இன்றைய தினம் 54 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து மொத்த உயிரிழப்பு ஆயிரத்து 79 ஆக உயர்வடைந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் ஆயிரத்து 992 புதிய தொற்றாளர்கள் இன்று இனம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை 53 ஆயிரத்து 762 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

இதுவரை 45 ஆயிரத்து 537 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 35 ஆயிரத்து 656 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE